பால் பணியாரம்


தேவையான:

 

பச்சரிசி - அரை கப்

உளுத்தம்பருப்பு - அரை கப்

பால் - 1 லிட்டர் 

தேங்காய்ப்பால் - 1 கப் 

சர்க்கரை அரை டீஸ்பூன் 

உப்பு முக்கால் கப் 

ஏலக்காய்தூள் - 1 சிட்டிகை 

எண்ணெய் - பொரிப்பதற்கு 




செய்முறை : ✒


அரிசியையும் உளுத்தம்பருப்பையும் ஒரு மணி நேரம் ஊறவைத்து , நைஸாக அரைத்து ( வடைமாவு பதத்தில் ) , கடைசியில் உப்பைச் சேர்த்து நன்கு அரைத்தெடுங்கள் . 

பாலை அடுப்பில் வைத்துக் காய்ச்சி , கால் பாகம் வற்றிய பிறகு , சர்க்கரை சேர்த்து , மேலும் 10 நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறக்குங்கள் . 

அதில் , ஏலக்காய்த் தூள் , தேங்காய்ப்பால் சேர்த்து கலந்துவையுங்கள் .

கடாயில் எண்ணெயை காயவைத்து , அரைத்து வைத்துள்ள மாவிலிருந்து சிறிதளவு எடுத்து , சுண்டைக்கையளவு கிள்ளி , எண்ணெயில் போட்டு , வெந்தவுடன் ( சிவந்துவிடாமல் ) எடுங்கள் . 

எல்லா மாவையும் இதேபோல் பொரித்து வைத்துக்கொள்ளுங்கள் .

பரிமாறுவதற்கு 10 நிமிடம் முன்பாக இந்தப் பணியாரங்களை , ஏற்கெனவே தயாரித்து வைத்திருக்கும் பாலில் கலந்து பரிமாறுங்கள் . 

இது செட்டிநாட்டு ஸ்பெஷல் ஸ்வீட் . 


குறிப்பு : 

மாவில் சிறிதளவேனும் அரிசியோ , உளுத்தம்பருப்போ அரைபடாமல் இருந்தால் பணியாரம் வெடிப்பதற்கு வாய்ப்புண்டு எனவே , அரைக்கும்போதே மாவை அடிக்கடி தள்ளிவிட்டு , நன்கு அரையுங்கள் .

Comments